×

நேற்று (1) மஹர சிறையில் நடந்த மோதலால் சிறைக்கு ஏற்பட்ட சேதத்தின் மதிப்பு ரூபா 15 கோடிக்கும் அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்திற்கான காரணங்களைக் கண்டறிய தொடங்கப்பட்டுள்ள விசாரணைகளின் போது இத்தகவல் மதிப்பிடப்பட்டுள்ளது. 

சிறைக்கைதிகள், சிறையில் உள்ள பல பொருட்களைச் சேதப்படுத்தியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மஹர சிறைக்குள் பல கட்டிடங்களின் ஓடுகள் உடைக்கப்பட்டு, கூரைகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளதாகவும், சிறை மறுவாழ்வுத் திட்டங்களில் தையலுக்குப் பயன்படுத்தப்படும் பல உபகரணங்களைச் சிறைக்கைதிகள் அழித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115